அம்பிகாவின் மீது தாக்குதலுக்கு ம.இ.கா கண்டனமா? மெர்லிமாவ் ம.இ.கா வின் செயல் எதை குறிக்கிறது – சார்ல்ஸ் கேள்வி
டத்தோ அம்பிகா வீட்டின் முன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ம.இ.கா கண்டனம் தெரிவித்துள்ளது என மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அப்படியானால், மெர்லிமாவ் ம.இ.கா வினரின் செயல் எதை குறிக்கின்றது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
டத்தோ அம்பிகாவின் மீது போலிஸ் புகாரும், அவரின் குடியுரிமை மற்றும் பட்டத்தை மீட்க சொன்ன மெர்லிமாவ் ம.இ.கா வின் மனித அடிப்படை உரிமை அத்துமீறும் செயல் குறித்து டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் என்ன சொல்ல போகிறார்?
இனவாதம் அடிப்படையிலான தாக்குதல் இது இல்லையென என்று இவர் கூறினாலும் , உண்மை நிலவரங்கள் அதற்கு மாறாகவே சித்தரிக்கின்றன என கூறிய சார்ல்ஸ் ஏன் பெர்சே அமைப்பின் இன்னொரு இணைத் தலைவரான பாக் சமாட் என அழைக்கப்படும் ஏ சமாட் சைட் மீது எந்த தாக்குதல்களும் நடத்தப் படவில்லை என மேலும் கேள்வி தொடுத்தார்.
டத்தோ அம்பிகாவின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ம.இ.கா கண்டனம் தெரிவிப்பது உண்மையானால், அவருக்கு எதிராக செய்யப்பட போலிஸ் புகாரை மெர்லிமாவ் ம.இ.கா உடனடி மீட்டுக் கொள்ளும் படி டாக்டர் சுப்ரமணியம் உத்தரவிடத் தயாரா என சார்ல்ஸ் சவால் விடுகையில், அதே வேளையில் அவரின் குடியுரிமையையும் பட்டங்களையும் பறிக்க சொன்னதற்காக மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தி கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.