தீபாவளி அனைவரும் கொண்டாட வேண்டிய திருநாள் – சார்லஸ்

தீபாவளி என்பது இந்தியர்கள் மட்டும் கொண்டாட வேண்டிய பெருநாள் அல்ல.இது மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து  ஒற்றுமையாய்  கொண்டாட வேண்டிய திருநாள் என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ.

மலேசிய பல்லின மக்கள் வாழும் நாடு. இங்கு  நாம் நல் உறவோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்வது மிக முக்கியமாகும். அது மட்டுமில்லாது, பெருநாள் காலங்களில் மற்ற இனத்தவரிடம் ஒன்றிணைந்து பெருநாள் கொண்டாடும்போது, நமது நல் உறவுகளை நம் இன்னும் வலுப் படுத்த முடிகிறது.

இதனை  கருத்தில் கொண்டு நாளை மாலை 7  மணியளவில், டேவான் செர்பகுணா பண்டமாரன் ஜாயாவில் ஏற்பாடு செய்திருக்கும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் அனைவரும்  திரளாக வந்து கலந்துக் கொள்ளும் படி அழைக்கின்றனர் சார்ல்ஸ் சந்தியாகோவும் ஏற்பட்டுக் குழுவினர்களும்.